Site icon Tamil News

இடிந்து விழுந்த கவோவ்கா அணை : எழுவரை காணவில்லை என அறிவிப்பு!

கவோவ்கா அணை இடிந்து விழுந்துள்ள நிலையில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி ஏழுப் பேர் காணாமல் போயுள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

டினிப்ரோ ஆற்றி மீது கட்டப்பட்டிருந்த கவோவ்கா அணை இடிந்து விழுந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு உக்ரைனும், ரஷ்யாவும் பரபரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கிய ஏழு பேரை காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இருந்து நேற்றைய தினம் 900இற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இருப்பினும் குறித்த பகுதியில் ஏறக்குறைய 20 ஆயிரம் பேர் ஆபத்தில் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version