சமனல ஏரி நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான நீர் கொள்ளளவை விடுவிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தேசிய மின்சாரத் தேவைக்கு மாற்று வழிகளைக் கண்டறிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அதன் பிரகாரம் உடவலவ நீர்த்தேக்கத்திற்கு விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான நீரை விடுவிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.