Site icon Tamil News

இலங்கை வந்த சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த யானை!

வெளிநாட்டுசுற்றுலாப்பயணிகள் ஆக்ரோசமான யானையொன்றை எதிர்கொண்டு மயிரிழையில் உயிர்தப்பிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலனறுவ தேசிய பூங்காவிற்கு சென்ற பயணிகளுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியொன்றில் பயணம் செய்த சுற்றுலாப்பயணிகளே யானையை அருகில் எதிர்கொண்டுள்ளனர்.

யானையால் ஏற்படக்கூடிய ஆபத்தை உணராமல் சுற்றுலாப்பயணிகள் அதற்கு அருகில் சென்று படம் பிடிக்க முயல்வதையும் தீடிரென சீற்றமடைந்த யானை அவர்களை நோக்கி வேகமாக வருவதையும் முச்சக்கர வண்டிகளை தலைகீழாக புரட்டிப்போடுவதையும் வெளியாகியுள்ள வீடியோக்கள் காண்பித்துள்ளன.

முச்சக்கரவண்டியொன்றிற்குள் இருந்த இரண்டு வெளிநாட்டவர்கள் சிறிய காயங்களுடன் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

Exit mobile version