Site icon Tamil News

பவுசர் ஒன்று பாறையில் கவிழ்ந்து விபத்து

ஹல்துமுல்ல பத்கொட பிரதேசத்தில் எரிபொருள் பவுசர் ஒன்று பாறையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து ஹப்புத்தளை நோக்கி 33,000 லீற்றர் டீசல் ஏற்றிச் சென்ற பௌசர் இன்று (06) அதிகாலை 1.45 மணியளவில் 50 அடி உயரமுள்ள குன்றின் மீது கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அங்கு வீடு ஒன்றும் சேதமடைந்துள்ளதுடன், விபத்தில் பௌசரின் சாரதி மற்றும் உதவி சாரதி ஆகியோர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தின் பின்னர் பௌசரில் வெளியிடப்பட்ட எரிபொருளை எடுத்துச் செல்வதற்காக பிரதேசவாசிகள் ஒன்று திரண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பௌசரின் சாரதி தூங்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Exit mobile version