Site icon Tamil News

ஈராக்கில் அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல்

ஈராக்கில் அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கியிருந்த விமானப்படை தளம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஈராக்கின் மேற்குப் பகுதியில் உள்ள அல் அசாத் விமானப்படை தளத்தை குறிவைத்து தொடர் ஏவுகணை மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதலில் பல அமெரிக்க ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும், ஆனால் சரியான எண்ணிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரானின் ஆதரவுடன் ஈராக்கில் இயங்கி வரும் தீவிரவாதிகள் குழுவினால் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version