Site icon Tamil News

குழந்தைகள் வார்டு ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து

மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய அடுக்குமாடி கட்டிடத்தை நிர்மாணிக்கும் போது ஏற்பட்ட விபத்து காரணமாக பல குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் வார்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

புதிய அடுக்குமாடி கட்டிடத்திற்கு இயந்திரம் ஒன்று கொங்கிரீட் போட சென்ற போது, ​​கட்டுமான கட்டிடத்தை அண்டிய குழந்தை வார்டின் மேற்கூரையில் கலவையான கான்கிரீட் அடுக்கு விழுந்து குழந்தை வார்டின் மேற்கூரை உடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்போது வார்டில் இருந்த பல குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் மீது கான்கிரீட் விழுந்து விபத்து ஏற்பட்டது.

இன்று (30) காலை இடம்பெற்ற இந்த விபத்து காரணமாக மூன்று தாய்மார்களும் மூன்று சிசுக்களும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

விபத்து காரணமாக வார்டில் இருந்த குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

எவருக்கும் காயம் ஏற்படவில்லை என மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையின் மருத்துவப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version