Site icon Tamil News

கிளிநொச்சியில் விபத்து – சம்பவ இடத்திலையே ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சியில் இடம்பெற்ற வீதி விபத்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கனகாம்பிகை குளம் பகுதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில், கிளிநொச்சி 155ஆம் கட்டையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறுந்தூர பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்ட பேருந்தினை மோட்டார் சைக்கிளில் வந்தவர் முந்தி செல்ல முற்பட்ட வேளை அதே திசையில் வந்த பாரவூர்தி மோட்டார் சைக்கிள் ஓட்டியை மோதி தள்ளியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தினை அடுத்து பரவூர்தி சாரதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version