Site icon Tamil News

ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைக்காவிட்டால் 6000 பேரின் வேலைக்கு ஆபத்து

ஸ்ரீலங்கன் விமான சேவையை உடனடியாக மறுசீரமைக்காவிட்டால் சுமார் 6000 ஊழியர்களின் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக நஷ்டமடைந்து வரும் ஸ்ரீலங்கன் விமான சேவையை அரசாங்கத்தால் தொடர்ந்தும் பராமரிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் வரிப்பணத்தை தொடர்ந்தும் வீணடிப்பது அநியாயம் எனவும் தெரிவித்த அமைச்சர், இந்த செயற்பாடுகளை மிகவும் வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என குறிப்பிடப்படுகின்றது. .

நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (30) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version