Site icon Tamil News

கணவனால் கொல்லப்பட்ட மனைவி

குடும்ப தகராறு காரணமாக மனைவியின் தலையில் கோடரியால் தாக்கி கொலை செய்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர் வாத்துவ பொதுப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாத்துவ, பொதுப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் ஹசினி சன்சனி ருவன்திலக என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வாத்துவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version