Site icon Tamil News

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என நான் எங்கும் கூறவில்லை – ரணில்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தாம் எங்கும் கூறவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஆளும் கட்சி அமைச்சர்கள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தாம் போட்டியிடப் போவதாகவோ, போட்டியிடப் போவதில்லை என்ற எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்காக பல பணிகளைச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு புதிய பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அதற்கு கால அவகாசம் தேவைப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version