Site icon Tamil News

குடி போதையில் இருந்த அரச அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை

கெக்கிராவ பிரதேச செயலக வளாகத்தில் குடிபோதையில் தகாத முறையில் நடந்து கொண்ட முகாமைத்துவ உதவியாளர் ஒருவர் இன்று (26) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நிருவாக உதவியாளரின் இவ்வாறு குடிபோதையில் அநாகரீகமாக நடந்து கொண்டமையினால், ஏனைய ஊழியர்களும், சேவை பெற வந்தவர்களும் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் கெக்கிராவ பிரதேச செயலாளர் கெக்கிராவ பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்திருந்தார்.

கெக்கிராவ பிரதேச செயலாளரின் அறிவித்தலுக்கு அமைய கெக்கிராவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று அங்கு சென்று முகாமைத்துவ உதவியாளரை பிரதேச செயலக வளாகத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

Exit mobile version