Site icon Tamil News

புறக்கோட்டையில் அழகு சாதன பொருட்கள் வாங்குபவர்களுக்கு எச்சரிக்கை

கொழும்பு புறக்கோட்டையில் காலாவதியான முக கிரீம்கள் மற்றும் வாசனை திரவியங்களை தலா 100 ரூபாய்க்கு விற்பனை செய்யும் மோசடி கும்பலை நுகர்வோர் அதிகாரசபையின் கொழும்பு சுற்றிவளைப்பு பிரிவினர் முறியடித்துள்ளனர்.

காலாவதியாக இந்தப் பொருட்கள் வெல்லம்பிட்டி பகுதியில் சேமித்து வைக்கப்பட்டு ஒரு நபரால் பெறப்பட்டு, வியாபாரத்திற்காக அனுப்பப்படுகிறது.

நுகர்வோர் அதிகாரசபையின் கொழும்பு மாவட்ட சுற்றிவளைப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், புறக்கோட்டை முதலாம் மற்றும் இரண்டாவது குறுக்கு வீதியின் நடைபாதையில் காலாவதியான வாசனை திரவியங்கள் மற்றும் அழகுசாதன பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பொலிஸாருடன் அதிகாரிகள் குழுவொன்று சென்றுள்ளது.

முக அழகுசாதனப் பொருட்கள் தவிர, காலாவதியான வாசனை திரவியங்களும் இங்கு விற்கப்பட்டன.

நிறுவனங்களால் அழிக்கப்படும் இப்பொருட்கள் வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரால் பெறப்பட்டு பின்னர் நடைபாதையில் பல்வேறு நபர்களால் விற்பனை செய்யப்படுவது ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன்படி, சம்பந்தப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், இந்த வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்வதாக தெரிவித்தனர்.

Exit mobile version