ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட Cathay Pacific Airlines இலங்கைக்கான விமான சேவைகளை மீள ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.
கொரோனா தொற்று நிலைமை மற்றும் தற்போது எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகளின் அடிப்படையில், கடந்த சீசனில் இலங்கைக்கான அவர்களின் விமானங்களை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்படி, அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி முதல் ஹொங்கொங்கில் இருந்து கட்டுநாயக்கவிற்கும், கட்டுநாயக்கவிலிருந்து ஹொங்கொங்கிற்கும் Cathay Pacific விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.