Site icon Tamil News

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை அழைத்துச் சென்ற வேன் யாழில் விபத்து!! ஒருவர் பலி

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று யாழ்ப்பாணம் நுனாவில் பகுதியில் உழவு இயந்திரத்தின் பின்பகுதியில் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் வேனின் சாரதியான யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

வேன் சாரதி தூங்கியதால் விபத்து நேர்ந்ததாக விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் சாவகச்சேரி பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்தின் காரணமாக  உழவு இயந்திரம் பல துண்டுகளாக உடைந்துள்ளதுடன் சாரதியும் காயமடைந்துள்ளார்.

வேனில் பயணித்த ஐந்து வெளிநாட்டவர்களில் மூவர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் ஒருவர் சிறுமி எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version