இலங்கையில் இந்த நேரத்தில் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நாடு இக்கட்டான நேரத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கை நாட்டுக்கும் பொருளாதாரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாறாக நன்மையை ஏற்படுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவிசாவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.