இன்று (07) பிற்பகல் அளுத்கமவில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த ரயிலில் மோதி இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்தனர்.
வாதுவ, ரத்நாயக்கவில் வசிக்கும் 39 வயதுடைய குருகே நீல் பெரேரா என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாதுவ தல்பிட்டிய ரத்நாயக்க வீதியில் புகையிரத கடவைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வாதுவ நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சமிந்திர குமாரவின் பணிப்புரைக்கமைய பல்வேறு முறைப்பாடு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.