Site icon Tamil News

கனடாவின் வான்கூவர் பகுதியில் வாகனத் தரிப்பிடத்தில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம்!

கனடாவில் பிறந்த சிசு ஒன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கனடாவின் வான்கூவாரின் விக்டோரியா பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

வாகன தரிப்பிடம் ஒன்றில் பிறந்த சிசுவொன்று இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளது.பிளான்ட் ஷார்ட் சென்டர் ஷாப்பிங் பிளாசா பகுதியின் வாகனத் தரிப்பிடத்தில் இரவு இந்த சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர்.சடலமாக சிசு அந்தப் பகுதியில் பிறந்திருக்க வேண்டும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இந்த குழந்தையை பிரசவித்த தாய்க்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.சம்பவம் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சிசுவை பிரசவித்த தாயை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.என்ன காரணத்திற்காக சிசுவை தாய் விட்டுச் சென்றார்? சிசு இறந்தே பிறந்ததா? அல்லது பிறந்ததன் பின்னர் இந்ததா? போன்ற பல கேள்விகளுக்கு விசாரணைகளின் பின்னரே பதிலளிக்க முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version