Site icon Tamil News

மெக்சிகோவில் காணாமல் போன மூன்று பெண்கள்!

மெக்சிகோவிற்கு பயணம் செய்த மூன்று பெண்கள் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூன்று பெண்களும் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பெனிடாஸிலிருந்து பெப்ரவரி 24 ஆம் திகதி மெக்சிகோவிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து குறித்த மூவரும் சுமார் இருவாரங்களாக காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி டோரா அலிசியா செர்வாண்டஸ் சான்ஸ் என்ற 53 வயதுடைய பெண்ணும், மரினா பெரெஸ் ரியோஸ் என்ற 48 வயதுடைய பெண்ணும், மரிட்சா என்ற 47 வயதுடைய பெண்ணும் இவ்வாறு காணாமல்போயுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து மெக்ஸிகோ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version