Site icon Tamil News

அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பு – ஒரே வீட்டைச் சேர்ந்த 5 பேர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தில் வீடொன்றில் 5 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

5 பேரை சுட்டுக்கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் தேடப்பட்டு வருகிறார்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த அந்த 5 பேரும் ஹொண்டுராஸைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

இது அமெரிக்காவை உலுக்கியிருக்கும் ஆகப்புதிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஆகும். கொல்லப்பட்டவர்களில் 8 வயது சிறுமி ஒருவரும் அடங்குவார்.

சம்பவத்தின்போது அந்த வீட்டில் இருந்தவர்கள் குழந்தையைத் தூங்க வைத்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த ஆடவர் வீட்டின் கொல்லைப்புறத்தில் AR 15 ரக துப்பாக்கியை வைத்து சுட்டுக்கொண்டிருந்தார்.

துப்பாக்கியால் சுடுவதை நிறுத்துமாறு அந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் நபரை கேட்டுள்ளனர்.

அதற்குப் பிறகுதான் அந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தியர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அந்த நபர் மெக்சிக்கோவைச் சேர்ந்தவராகவும், சம்பவத்துக்குப் பிறகு அவர் நாட்டை விட்டு ஓடியிருப்பதாகவும் நம்பப்படுகிறது.

Exit mobile version