Site icon Tamil News

5.ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் பெயரை சூட்ட வேண்டும் சட்டப்பேரவையில் வேல்முருகன் வலியுறுத்தல்

வடசென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் எதேனும் ஒன்றிற்கு  ரூ.5 மருத்துவர் டாக்டர் ஜெயச்சந்திரன் பெயரை சூட்ட வேண்டும் என்று சட்டப்பேரவையில் வேல்முருகன் வலியுறுத்தினார் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய தமிழ்நாடு வாழ்வுரிமை கழக கட்சியின் தலைவர் வேல்முருகன் ,

ஐந்து ரூபாய் டாக்டர் என்று வடசென்னை மக்களிடையே அன்பாக அழைக்கப்பட்டவர் டாக்டர் ஜெயச்சந்திரன்.  வடசென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் திருவொற்றியூர் வரை வருவதற்கு டாக்டர் ஜெயச்சந்திரன் அரும்பாடுப்பட்டார்.

மாணவர்கள் இளைஞர்கள் பெண்கள் மற்றும் வியாபாரிகள் என்று பல்வேறு தரப்பினரை திரட்டி மனித சங்கிலி போராட்டம் நடத்தியவர் டாக்டர் ஜெயச்சந்திரன். அவருடைய நினைவை போற்றும் வகையில் வடசென்னையில் உள்ள ஏதேனும் ஒரு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு டாக்டர் ஜெயச்சந்திரனின் பெயர் சூட்ட வேண்டும் என்று வேல்முருகன் கேட்டுக்கொண்டார்.

 

Exit mobile version