Site icon Tamil News

இலங்கை பாடசாலைகளில் குறைவடைந்த 40,000 மாணவர்கள்

கடந்த பத்து வருடங்களில் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு சிறுவர்களை சேர்ப்பது சுமார் 40,000 ஆக குறைந்துள்ளதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

குழந்தைப்பேறுகள் குறைவடைந்தமையே இந்த நிலைமைக்குக் காரணம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் கூறுகிறார்.

கல்வி அமைச்சின் தரவுகளை அவதானிப்பதன் மூலம் அரச பாடசாலைகளுக்கு முதலாம் தரத்திற்கு உள்வாங்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைவடைந்து வருவதாகவும், 2021ஆம் ஆண்டில் 304,105 மாணவர்கள் முதலாம் தரத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்குச் சேர்ந்த குழந்தைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து 292,216 ஆகக் குறைந்துள்ளதாகவும், பொருளாதார நெருக்கடி காரணமாக ஆரம்பப் பிரிவில் உள்ள பாடசாலை மாணவர்களும் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளதாக கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version