Site icon Tamil News

வீரர்களை பதம் பார்த்த காளைகள்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கோவிலூர் ஶ்ரீ முத்துமாரியம்மன் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 700 காளைகள், 250 மாடு பிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இப்போட்டியில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் பங்கேற்று களமாடி வருகின்றன.

இந்த ஜல்லிகட்டில் சிறந்த முறையில் காளையை அடக்கிய காளையர்களுக்கும் சிறந்த முறையில் களமாடும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் இருசக்கர வாகனம் (பைக்) பரிசாக வழங்கப்பட உள்ளது.

 

Exit mobile version