Site icon Tamil News

கோடைகாலம் என்பதால் வண்டலூர் பூங்காவிற்கு விடுமுறை இல்லை

சென்னை,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டங்களுடைய பொதுமக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றாக இருப்பது வண்டலூர் உயிரியல் பூங்கா.

செவ்வாய்க்கிழமை விடுமுறை என்பதால் வழக்கமாக பொதுமக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் அந்த நாளில் விலங்குகளுக்கான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்த நிலையில் தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதாலும் வண்டலூர் உயிரியல் பூங்கா செவ்வாய்க்கிழமைகளும் விடுமுறையின்றி இயங்கும் என வண்டலூர் உயிரியல் பூங்கா சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை காலம் என்பதால் விலங்குகளுக்கும் பார்வையாளர்களுக்கும்  சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Exit mobile version