Site icon Tamil News

வளிமண்டலத்தின் கீழடுக்கு சுழற்சி : தமிழத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என அறிவிக்கப்ப்டுள்ளது.

இதன்படி  இன்றும்,  நாளையும் தமிழகம்,  புதுச்சேரி,  காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வரும் 24 ஆம் திகதி  முதல் 26 ஆம் திகதி வரை  ஒருசில இடங்கில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version