Site icon Tamil News

மூன்று நாட்களில் ராகுல் காந்திக்கு மீண்டும் பதவி

சிவகங்கை அரண்மனை வாசல் முன்புள்ள சண்முகராஜா கலையரங்கில் நகர் திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலினின் 70 வது பிறந்த நாள் விழா மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கழக அமைப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி மற்றும் மாவட்ட செயலாளரும் கூட்டுறவு துறை அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

இத அதிமுகவில் நம்பிக்கை துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் சின்னம்மா என காலை பிடித்துக்கொண்டு பதவி ஏற்றவர் பின்னர் அவர்களை தூக்கி எரிந்து துரோகம் விளைவித்தவர் பழனிச்சாமி என பேசியதுடன் பிரதமர் மோடிக்கு நேற்று முதலே கேடு காலம் ஆரம்பமாகிவிட்டது,

என்றும் ராகுல் காந்தியை பதவிநீக்கம் செய்தது முதலே அவருக்கான கவுண்டவுன் துவங்கிவிட்டது என்றும் உடனடியாக ராகுலின் பதவியை பறித்த சபாநாயகர் ஏன் கடந்த 4 ஆண்டுகளாக துனை சபாநாயகர் தேர்தலை ஏன் நடத்தவில்லை,

என்று கேள்வி எழுப்பிய அவர் இன்னும் மூன்று நாட்களில் ராகுல் காந்திக்கு மீண்டும் பதவியை பெற்று தருவோம் என பேசினார். இந்த கூட்டத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன் ஆகியோர் உடனிருந்தனர்.

Exit mobile version