Site icon Tamil News

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாதவிடாய் என்பது பெண்ணின் உடலில், மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றமாகும்.இந்த   மாதவிடாயினால் உலகளவில் 50சதவீத பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் மாதவிடாய் காலத்தில் தொடர் வயிற்று வலி, உடல் ரீதியான பிரச்சினைகள்,எண்டோமெட்ரியோசிஸ் குறித்தும்,வரும் காலங்களில் நோய்களில் இருந்து தற்காத்து கொள்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக எண்டோ மார்ச் எனும் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாநகராட்சியின் மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்த இந்த வாக்கத்தான் நிகழ்ச்சி ராவ் மருத்துவமனை முன்பாக துவங்கி ஆர்.எஸ்புரம் வழியாக 5கிலோ மீட்டர் வரை என 500க்கும் மேற்பட்டவர்கள் பதாகைகள் ஏந்தியபடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Exit mobile version