Site icon Tamil News

பூ பிரித்தல் நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைபெற்றது

புதுக்கோட்டை நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றதையோட்டி இன்று மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் பூ பிரித்தல் நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் மாவட்டத்திலேயே மிகப் புகழ்பெற்ற ஆலயமாகவும் தேவஸ்தான தலைமை கோவிலாகவும் திகழ்கிறது

இந்த ஆலயத்தில் நேற்று இரவு நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து பூ பல்லாக்குடன் பூச்செரிதல் விழா நடைபெற்றது

இதனை முன்னிட்டு ஆண்டுதோறும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் பூப் பிரித்தல் நிகழ்வு நடைபெற்று வருவது வழக்கம்

இந்த வழக்கம்போல் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் பூ பிரித்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது

அப்போது சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களுடன் சிறப்பு தீபாரதனை முத்து மாரியம்மனுக்கு காண்பிக்கப்பட்டு மிக விமர்சையாக நடைபெற்றது

அப்போது ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

Exit mobile version