Site icon Tamil News

புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது

பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா கட்டுமான உரிமையாளர்களின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றன.

காஞ்சிபுரம் மாவட்டம் பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா காஞ்சிபுரம் மையத்தின் கட்டுமான உரிமையாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா காஞ்சிபுரம், சென்னை,பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள  தனியார் மண்டபத்தில் நடைபெற்றன.

2023-2024 ஆம் ஆண்டின் புதிய நிர்வாகிகளை அகில

இந்திய தலைவர்கள் ஆர்.ராதாகிருஷ்ணன், மு.மோகன், முன்னாள் தலைவர் பிஸ்மா ஆகியோர்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைவருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.

இவற்றில் காஞ்சிபுரம் கட்டுமான உரிமையாளர் சங்க தலைவராக என். கார்த்திகேயன்,  துணைத்தலைவர் ஆர்.பாஸ்கரன், செயலராக எம்.பாபு,  இணை செயலாளர் பி. ஸ்ரீதர், பொருளாளராக எம்.ஜி.சுந்தர் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக பதவியேற்றனர்.

மேலும் கட்டுமான உரிமையாளர்கள் சங்க அகில இந்திய தலைவர் ஆர் ராதாகிருஷ்ணன் பேசுகையில் காஞ்சிபுரம் சமதர்ம சமத்துவமிக்க கல்வியை தந்த இவ்விடத்தில் மாபெரும் பதவியேற்பு விழா நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கட்டுமான உரிமையாளர்கள் அனைவரும் ஒற்றுமையுடன்.

செயல்பட்டு சங்கத்தை மேலும் பல்வேறு நிலைக்கு உயர்த்தி செல்ல வேண்டும் என்றும் அனைவரின் கூட்டு முயற்சியே இச்சங்கத்தின் பலமாக இருக்க வேண்டுமென சங்க உறுப்பினர்கள் மத்தியில் தெரிவித்தார்.

இவ்விழாவில் காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு,  திருவண்ணாமலை ஆகிய மாவட்ட கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வருகை புரிந்து புதிய உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Exit mobile version