Site icon Tamil News

நாம் தமிழர் செயலாளர் மீது வழக்கு

பொதுக் கூட்டத்தில் தேச நல்லிணக்கத்திற்கும், இந்திய ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் மீது உக்கடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை உக்கடம் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் ஆறாம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் உரையாற்றினார். இந்நிலையில் அவர் தேச நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும் இந்திய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக பேசியதாகவும் இரண்டு பிரிவுகளின்(153(A)(I)(a), 505(ii)) கீழ் உக்கடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Exit mobile version