Site icon Tamil News

அள்ளி கொடுத்த அதிமுக வாங்கி சென்ற சிறுவர்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் ஒன்றியத்துக்குட்பட்ட கீழ்அம்பி ஊராட்சி மற்றும் திருப்புட்குழி ஊராட்சி பகுதிகளில் அதிமுக ஒன்றிய துணை செயலாளர், ஊராட்சி ஒன்றிய குழு கவுன்சிலர் விமல்ராஜ் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர், மாவட்ட செயலாளர் வி. சோமசுந்தரம் தலைமையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றன.

காஞ்சிபுரம் பகுதியில் சுட்டெரிக்கும் வெயில் தாக்கத்தால் பொதுமக்கள், முதியோர், குழந்தைகள் வீட்டின் உள்ளே முடங்கி இருப்பதாலும் தொழில் புரிவோர், தொழிற்சாலைக்கு பணிக்கு செல்வோர் வெயிலில் பயணம் செய்யும் நிலையில் அவர்களின் தண்ணீர் தாகம் போக்கும் வகையில் அதிமுக சார்பில் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் முழுக்க பொதுமக்கள் கூடும் பகுதிகளில் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ்அம்பி கூட்டு சாலையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்களில் தண்ணீர் பந்தல் அமைத்தனர்.

மேலும் தண்ணீர் பந்தல் துவக்க விழாவில் பல்வேறு வகையான வெயிலுக்கு குளுமை அளிக்கும் பழ வகைகள் தர்பூசணி, பனங்காய், கிருனி காய், மோர், குளிர்பானங்கள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கியும் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டன அப்பொழுது சிறுவர்கள் பழங்களை பெற்ற மகிழ்ச்சியில் அள்ளிச் சென்று மகிழ்ச்சி உற்றனர்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா கணேசன், முன்னாள் எம்பி பன்னீர்செல்வம், மாவட்ட அவைத் தலைவர் குன்னவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜி, மற்றும் அதிமுக நிர்வாகிகள் கே யு எஸ் சோமசுந்தரம், வி ஆர் மணிவண்ணன், மாநகரப் பகுதி செயலாளர் பாலாஜி மற்றும் அதிமுக மாநகர, ஒன்றிய நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Exit mobile version