Site icon Tamil News

திருமணத்தை பார்க்க முடியவில்லை உறவினர்கள் வேதனை

சென்னையில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் குன்றத்தூர் முருகன் கோவில் ஒன்று இந்த கோவிலில் முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம் வழக்கமாக இந்த கோவிலில் ஒரு முகூர்த்தத்தில் பத்து முதல் 12 திருமணங்கள் நடத்த இடம் உள்ள நிலையில் கோயில் நிர்வாகம் அளவுக்கு அதிகமான பேர்களுக்கு திருமணத்திற்கு படிவங்கள் கொடுத்து விடுவதால் முகூர்த்த நாட்களில் இந்த கோவிலில் அதிக அளவில் திருமணங்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால் கூட்ட நெரிசலும், தள்ளு முள்ளும், பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இதற்கு உதாரணமாக கடந்தாண்டு இரண்டு திருமண வீட்டார் மாறி, மாறி தாக்கி கொண்ட சம்பவம் உதாரணமாக இருந்தது. இந்த நிலையில் திருமணத்தின்போது கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தற்போது தனியார் பவுன்சர்களை கோயில் நிர்வாகம் பணிக்கு நிறுத்தியதால் கோயில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது இதனால் காலை நேரத்தில் திருமணத்திற்கு வந்த உறவினர்கள் திருமணத்தை காண உள்ளே செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர் ஒரு திருமணத்திற்கு 5 முதல் 10 நபர்களை மட்டுமே உள்ளே அனுமதித்ததால் அதிகாலை முதல் உறவினரின் திருமணத்தை காண வந்த உறவினர்கள் திருமணத்தை காண முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து வேதனை அடைந்தனர். எந்த கோவிலிலும் இல்லாத வகையில் தற்போது குன்றத்தூர் முருகன் கோவிலில் கூட்டத்தை கட்டுப்படுத்த தனியார் பவுன்சர்களை நியமித்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பாக கோவிலில் எந்த அளவிற்கு திருமணத்திற்கு விண்ணப்பங்கள் வழங்கி திருமணத்தை நடத்த முடியுமோ அந்த அளவிற்கு விண்ணப்பங்கள் வழங்கி திருமணங்களை நடத்தலாம் எனவும் அளவுக்கு அதிகமான கூட்டத்தை கூட்டி விண்ணப்பங்களை கொடுப்பதால் மட்டுமே இது போன்ற கூட்ட நெரிசல் ஏற்படுவதாகவும் கோயில் நிர்வாகம் முறையாக செயல்பட்டால் இது போன்ற பிரச்சனைகள் ஏதும் ஏற்படாது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version