Site icon Tamil News

சேலத்து மாம்பழங்களை கொண்டு சென்ற எடப்பாடி பழனிச்சாமி

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் இருந்து விமானம் மூலம் இன்று டெல்லி கிளம்பினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோரும் செல்கின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின் முதல்முறையாக எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்கிறார். இன்று கோவை விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

டெல்லி செல்லும் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசுகிறார். இதனை தொடர்ந்து டெல்லியில் முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்களை சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் டெல்லி செல்லும் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தின் அடையாளமாய் விளங்கும் சேலத்து மாம்பழங்களை எடுத்துச் சென்றார்.

Exit mobile version