Site icon Tamil News

புதுக்கோட்டையில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி மக்கள் மகிழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தாலும் கடந்த சில தினங்களாக மாலை நேரத்தில் அவ்வப்போது பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் புதுக்கோட்டை நகரப் பகுதியில் பகலில் கார்மேகம் சூழ்ந்து திடீரென மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக புதுக்கோட்டை நகரப் பகுதிகளான கிழ ராஜ வீதி அய்யனார்புரம் காந்திநகர் அசோக் நகர் சத்தியமூர்த்தி நகர் சின்னப்பா நகர் சேங்கன்தோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Exit mobile version