Site icon Tamil News

சுற்றிப் பார்க்க இலவசம்

ஆண்டு தோறும் மார்ச் 8 ம் தேதி சர்வதேச மகளிர்தினமாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு,

இன்று ஒரு நாள் மட்டும் மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களான  வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம் கடற்கரை கோயில் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி என தொல்லியல் துறை சார்பில் தெறிவிக்கப்பட்டுள்ளது,

இதனை அடுத்து மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர் காலையிலிருந்து சுற்றுலா பயணிகளின் வருகையால் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version