Site icon Tamil News

சீனாவின் விலங்குகள் வளர்ப்பு நிறுவனம் குறித்த மேலதிக விபரங்களை கோரும் இலங்கை!

சீனாவில் உள்ள மிருகக்காட்சிசாலைக்காக இலங்கையிலிருந்து  குரங்குகளை பெற முயன்ற சீனாவின் விலங்குகள் வளர்ப்பு நிறுவனம் குறித்த மேலதிக விபரங்களை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.

இலங்கையிலிருந்து குரங்குகளை கோரிய சீன நிறுவனத்தின் விபரங்களை தருமாறு சீன தூதரகத்தை கேட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை  குரங்குகளைஏற்றுமதி செய்வது சாத்தியமா என்பது குறித்து ஆராய்வதற்காக  குறிப்பிட்ட நிறுவனத்தின் பிரதிநிதிகளை அமைச்சர் மகிந்த அமரவீர மூன்று தடவை சந்தித்துள்ளார்.

இதேவேளை கிடைத்த தகவல்களை ஆராய்ந்தவேளை குறிப்பிட்ட சீன நிறுவனம் 2021 இல் சிறிய முதலீட்டுடன் பதியப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக இலங்கையின் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு  சமூகம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

 

Exit mobile version