Site icon Tamil News

ஒலிம்பிக் சாம்பியன்களுக்கு ரொக்கப் பரிசு அறிவிப்பு

உலக தடகள சம்மேளனம் எதிர்வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து தடகளப் போட்டிகளில் முதலிடத்தைப் பிடிக்கும் விளையாட்டு வீரர்களுக்கு பரிசுத் தொகை வழங்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கும் முதல் விளையாட்டு கூட்டமைப்பு என்ற பெருமையை உலக தடகள சம்மேளனம் பெற்றுள்ளது.

2024-ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலிருந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

அதன்படி, தங்கப் பதக்கம் வெல்பவருக்கு 50,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும்.

2028ஆம் ஆண்டு முதல் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Exit mobile version