Site icon Tamil News

கிரிக்கெட் உலக கோப்பை தொடரை காண மருத்துவமனைகளை முன்பதிவு செய்யும் ரசிகர்கள்

2023 உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் நாட்கள் நெருங்கி வருவதால், ரசிகர்கள் மத்தியில் மெல்ல சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

அக்டோபர் 5 திகதி தொடங்கும் இந்த தொடரை கிரிக்கெட்டின் பனிப்போராக ரசிகர்கள் பார்க்கின்றனர்.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக கருதப்படும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய – பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 15ஆம் திகதி நடைபெற உள்ளது.

இந்த போட்டிக்காக விளையாட்டு ரசிகர்கள் அகமதாபாத்தில் தங்குவதற்கு முன்கூட்டியே முன்பதிவு செய்து வரும் நிலையில், ஹோட்டல் அறையின் விலையும் 50,000 முதல் 100,000 இந்திய ரூபாயாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், விளையாட்டு ரசிகர்கள் ஹோட்டல்களை தவிர்த்து அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனைகளில் முழு உடல் பரிசோதனை செய்ய முன்பதிவு செய்துள்ளதாகவும், இதன் மூலம் மருத்துவமனைகளிலேயே தங்கிக்கொள்ள முடியும் எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கான செலவு 3,000 முதல் 25,000 இந்திய ரூபாயாக உயர்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version