Site icon Tamil News

மேக்கப் போட்டதால் திடீர்னு வீங்கி கருமையாகிய மணப்பெண் முகம்.. திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை!

மேக்கப் போட்ட இளம்பெண்ணின் முகம் கருமை நிறமாக மாறியதால் கல்யாணமே நின்ற சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் ஹாசன் மாவட்டம் அரிசிகெரேவை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் ஒரு இளைஞருடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. கடந்த வாரம் அவர்கள் 2 பேருக்குமே நிச்சயதார்த்தம் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.திருமணம் 2ம் திகதி அதாவது நேற்று முன்தினம்தான் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

அரிசிகெரேயில் திருமணத்துக்கான ஏற்பாடுகளும் ஏற்பாடாகி கொண்டிருந்த வேளையில் அதற்கு 2 நாட்களுக்கு முன்பு, மேக்கப் போட முடிவு செய்தார். இதற்காக அழகு நிலையம் ஒன்றிற்கு சென்றிருந்தார். திருமணத்திற்கு 2 நாட்கள் இருப்பதால் புதிய யுக்தியை பயன்படுத்தி வித்தியாசமாக மேக்கப் போட வேண்டும் தன்னுடைய விருப்பத்தை அழகு கலைநிபுணரான கங்காவிடம் சொல்லியுள்ளார்.

Exit mobile version