Site icon Tamil News

ராகுல் காந்தி இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம்

இந்திய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான குற்றவியல் வழக்கின் தீர்ப்பை அடுத்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 வருட சிறைத்தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றமொன்று நேற்று தீர்ப்பளித்தது.

அதையடுத்து அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற  மக்களவையின்  செயலகம் இன்று தெரிவித்துள்ளது.

Exit mobile version