Site icon Tamil News

தல்துவையில் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர் கைது

அவிசாவளை, தல்துவ பிரதேசத்தில் கடந்த மாதம் இருவர் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டை கட்டுவெவ பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

21 வயதுடைய இளைஞரிடம் 6 கிராம் ஹெராயின் போதைப்பொருளை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்,

செப்டெம்பர் 20 ஆம் திகதியின் பிற்பகுதியில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முச்சக்கர வண்டியில் பயணித்த நான்கு நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டதுடன், மற்ற இருவர் படுகாயமடைந்தனர்.

அவிசாவளையில் இருந்து கேகாலை நோக்கி முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர், அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஹல தல்துவ பிரதேசத்தின் குருபஸ்கொட வளைவுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு துப்பாக்கிதாரிகளினால் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.

கொலையாளிகள் உடனடியாக குற்றம் நடந்த இடத்தில் இருந்து தப்பிச் செல்வதற்கு முன்பு துப்பாக்கிச் சூட்டில் T-56 தாக்குதல் துப்பாக்கியைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

காயமடைந்த நால்வரும் அவிசாவளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர்களில் 27 வயதான மற்றும் 36 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளனர்.

Exit mobile version