Site icon Tamil News

கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் பலி!

கிளிநொச்சியில் நேற்று (19.12) பிற்பகல் இடம்பெற்ற ரயில் விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி புகையிரதம் ஆனந்தபுரம் பகுதியில் உள்ள புகையிரத கடவை வீதியை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிள் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version