எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலுக்கு இழப்பீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இம்மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இது குறித்து கொழும்பு வர்த்தக நீதிமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மற்றும் ஏனைய அமைப்புகள் தாக்கல் செய்த மனு நேற்று (23) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே இந்த இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான முகவர் நிறுவனமான சீ கொன்சவேர்டியம் அடங்கலாக 8 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நஷ்ட ஈடு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.