Site icon Tamil News

கொழும்பிற்கு பிழையான தகவல் செல்கிறது – வைத்தியர் அர்ச்சுனா கவலை

கொழும்பிலுள்ள மருத்துவ உயர் அதிகாரிகளுக்கு பிழையாக சொல்லப்படுவதாக வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் விடயங்கள் திரிபுப் படுத்தப்பட்டு சொல்லப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வடக்கு மாகாணத்தில் பணிபுரியும் வைத்தியர்களான வைத்தியர் சமன் பத்திரணவாக இருக்கட்டும், வைத்தியர் கேதீஸ்வரனாக இருக்கட்டும் வடக்கில் தற்போது நடைபெறும் விடயங்களை பிழையாக தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

எனது பக்கம் உள்ள பிரச்சினை கொழும்பிலுள்ள அதிகாரிகளுக்கு தெரியாது. முக்கியமாக யாழ்ப்பாணத்தில் நடந்த பிரச்சினை தொடர்பாக இவர்களுக்கு தெளிவான விளக்கம் இல்லை.

நான் இது தொடர்பாக அவர்களுடன் தொலைபேசி உரையாடலில் பேச விரும்பாமையினால் அவர்களுக்கு கடிதங்கள் அனுப்பி வைத்தேன். ஆனால் அந்த கடிதங்கள் அவர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version