Site icon Tamil News

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – இருவர் பலி

ராகமை – எலபிட்டிவல பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் 39 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். உந்துருளியில் பிரவேசித்த இருவரே குறித்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, இன்று காலை 7.15 மணி அளவில் மஹாபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலப்பிட்டிவல சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹெட்டியாராச்சிகே டொன் சுஜித் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் வெல்லே சாரங்க என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் உறவினர் என தெரியவந்துள்ளது.

Exit mobile version