Site icon Tamil News

காட்டில் இருந்து மீட்கப்பட்ட மண்டையோடு

புத்தளம், கருவலகஸ்வெவ, ஹத்தே கண்ணுவ பிரதேசத்தில் உள்ள காப்புக்காடு ஒன்றில் மனித மண்டை ஓடு மற்றும் பல எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பிரதேசவாசிகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கருவலகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போதே எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது.

ஒரு ஜோடி காலணிகள், எரிந்த பணப்பை, கத்தி, மரக்கிளையில் கட்டப்பட்ட கயிறு மற்றும் தரையில் மற்றொரு கயிறு ஆகியவற்றையும் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த எலும்புகளின் அடையாளம் இதுவரை வெளியாகவில்லை.

எலும்புகள் சட்ட வைத்திய பணிகளுக்காக புத்தளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் கருவலகஸ்வெவ பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Exit mobile version