Tamil News

ரஜினிகாந்திற்கு ஆளுநர் பதவி கிடைக்குமா? மதுரையில் பரபரப்பு பேட்டி

நடிகர் ரஜினிகாந்திற்கு அரசியலுக்கு வரும் திட்டம் எதுவும் இல்லை என்று அவரது சகோதரர் சத்யநாராயணா தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சகோதரர் சத்ய நாராயணன்மதுரையில் இன்று இரண்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களுக்கு தாலியை எடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்

பின்னர் ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயணா ராவ்விடம் ஓபிஎஸ் – ரஜினிகாந்த் சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்து சத்யநாராயணா ராவ் கூறியதாவது:- ஓபிஎஸ் – ரஜினிகாந்த் சந்திப்பில் அரசியல் இல்லை என்று கூறினார். மேலும், ரஜினிகாந்திற்கு ஆளுநர் பதவி எதுவும் கிடைக்குமா? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த சத்யநாரயணா அது இறைவன் கையில்.. ரஜினிக்கு அதில் விருப்பம் இல்லை. வந்தால் வேண்டாம் என்பதற்கு இல்லை.. வரட்டும்” என்றார்.

தொடர்ந்து ரஜினிக்கு அரசியலுக்கு வரும் திட்டம் எதுவும் இல்லை என்றும் கூறினார். இதன்போது மதுரை ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்

 

 

Exit mobile version