Site icon Tamil News

க்ரீஸில் பரவிய காட்டுத்தீ : 13 பேர் கைது!

க்ரீஸில் பயணிகள் படகில் இருந்த பட்டாசு வெடித்ததில் காட்டுத்தீ ஏற்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உள்ளூர் தீயணைப்பு சேவை  ஹைட்ரா தீவில், ஒரு படகில் இருந்து பட்டாசுகள் வெடித்ததால் தீவிபத்து ஏற்பட்டதாக கூறியுள்ளது.

இதனையடுத்து தீயணைப்பு சேவையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிக்கு சாலைகள் இல்லாததால், தீயணைப்பு வீரர்கள் கடல் மற்றும் விமானம் மூலம் அதை அணுக வேண்டியிருந்தது.

பின்னர் தீயணைப்பு படையின் குற்றப்பிரிவு 13 படகு பணியாளர்கள் மற்றும் பயணிகளை கைது செய்து விசாரைணைகளை முன்னெடுத்துள்ளது.

Exit mobile version