Site icon Tamil News

உக்ரைனின் கார்கிவை குறிவைத்து தாக்கிய ரஷ்யா : பலர் உயிரிழப்பு!

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷ்ய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்கிவ் பிராந்திய ஆளுநர் ஓலே சினிஹுபோவ் இந்த தகவலை அறிவித்துள்ளார்.

ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட் ட்ரோன் நகரின் நெமிஷ்லியான் மாவட்டத்தில் உள்ள குடிமக்களின் உள்கட்டமைப்பைத் தாக்கியதாகவும், இதனால் 15 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ரஷ்யாவால் ஏவப்பட்ட 31 ஈரானிய ஷாஹெட் ட்ரோன்களில் 23 விமானங்களை வான் பாதுகாப்பு அமைப்புகள் அழித்ததாக உக்ரேனிய விமானப்படை தெரிவித்துள்ளது.

ட்ரோன்கள் முதன்மையாக வடகிழக்கு கார்கிவ் பகுதியையும், தெற்கு மாகாணமான ஒடேசாவையும் குறிவைத்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version