Site icon Tamil News

அமெரிக்கா- ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர் – நால்வர் பலி!

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் நார்த் சோல்ப் பகுதியில் 4 பயணிகளுடன் இன்று ஹெலிகாப்டர் புறப்பட்டது. ஹெலிகாப்டர் அலாஸ்கா ஏரிப்பகுதியில் பறந்துகொண்டிருந்தது.

அப்போது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 4 பேரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏரிக்குள் விழுந்த ஹெலிகாப்டரில் வேறு யாரேனும் பயணித்தார்களா? விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version