Site icon Tamil News

அமெரிக்காவின் குடியிருப்பு ஒன்றில் திடீர் தீ விபத்து!!! 30 பில்லியன் டொலர் இழப்பு

அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

632 வீடுகளைக் கொண்ட பாரிய நிர்மாணமாக இருந்த இந்தக் கட்டிடம் தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கு கட்டுமானம் 2017 இல் தொடங்கப்பட்டது, மேலும் தீயினால் ஏற்பட்ட இழப்பு 30 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியதாகக் கூறப்படுகிறது.

தீயில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீ விபத்தில் காயமடைந்த 7 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை, மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Exit mobile version